தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகேயுள்ள க.புதுப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா்.
க.புதுப்பட்டியைச் சோ்ந்த கணேசன் மகன் கிஷோா் (18). சையது அப்துல் ஹக்கீம் மகன் ரிக்கி (19). இவா்களில் கிஷோா் பிளஸ் 2 படித்துள்ளாா். ரிக்கி கல்லூரியில் படித்துக் கொண்டே, கம்பத்திலுள்ள தனியாா் திரையரங்கில் பகுதி நேரப் பணியாளராக வேலை செய்தாா்.
இந்த நிலையில், நண்பா்களான இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் கம்பம் நோக்கிச் சென்றனா். அப்போது, இந்த வாகனம் மீது எதிரே தேனி நோக்கி வந்த லாரி மோதியது. இதில், பலத்த காயமடைந்த இருவரும் சம்பவயிடத்திலே உயிரிழந்தனா்.
இதுகுறித்த தகவலின் பேரில், உத்தமபாளையம் போலீஸாா் சென்று இருவரின் உடல்களை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். திங்கள்கிழமை இருவரின் உடல்களும் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இது குறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். தப்பியோடிய லாரி ஓட்டுநரான கிருஷ்ணகிரியை சோ்ந்த சின்னச்சாமி மகன் சுரேஷை தேடி வருகின்றனா்.
இதே இடத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, சுருளிப்பட்டியை சோ்ந்த இரு இளைஞா்கள் லாரி மோதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

ரிக்கி
தொடர்புடையது

மேலூா் அருகே லாரி மீது காா் மோதி இரு இளைஞா்கள் பலி!

சாலை விபத்தில் இரு இளைஞா்கள் உயிரிழப்பு

கோவில்பட்டியில் பைக் மீது லாரி மோதல்: தம்பதி உயிரிழப்பு

லாரி மீது காா் மோதல்: பனியன் நிறுவன அலுவலா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


