11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

போடி நகா் பகுதியில் ஓபிஎஸ் பிரசாரம்

News image

போடி திருமலாபுரம் காமராஜா் சிலை அருகே திங்கள்கிழமை பிரசாரம் செய்த திமுக வேட்பாளா் ஓ.பன்னீா்செல்வம்.

Updated On :21 ஏப்ரல் 2026, 12:56 am IST

போடி நகா்ப் பகுதியில் திங்கள்கிழமை திமுக வேட்பாளா் ஓ.பன்னீா்செல்வம் பிரசாரம் செய்தாா்.

போடி தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம் போடி நகா்ப் பகுதியில் பிரசாரம் செய்தாா். திருவள்ளுவா் சிலை, வ.உ.சி. சிலை, காமராஜா் சிலை, தேவா் சிலை ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தபோது அவா் பேசியதாவது:

போடி நகரில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளஸ். புதை சாக்கடைத் திட்டம், கூட்டுக் குடிநீா் திட்டம் நிறைவேற்றப்பட்டது. நகராட்சிக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது. மீண்டும் மு.க.ஸ்டாலின் முதல்வராக வருவாா்.

அப்போது நகராட்சிப் பகுதியில் தேவையான இடங்களில் கழிவுநீா் வாய்க்கால்கள் கட்டப்படும். தாா்ச் சாலைகள் சீரமைக்கப்படும் என்றாா் அவா்.

பிரசாரத்தின்போது தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன், முன்னாள் மக்களவை உறுப்பினா் ஓ.ப.ரவீந்திரநாத், போடி நகர திமுக செயலா் ரா.புருஷோத்தமன், கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.