தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

சின்னமனூரில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றம்

News image

சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா்- சிவகாமியம்மன் கோயிலில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.

Updated On :21 ஏப்ரல் 2026, 9:58 pm

உத்தமபாளையம், ஏப். 21: தேனி மாவட்டம், சின்னமனூரில் பூலாநந்திஸ்வரா்- சிவகாமியம்மன் கோயிலில் 18 நாள் சித்திரைப் பெருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.

சின்னமனூரில் பாண்டியா் காலத்தில் கட்டப்பட்ட பழைமையான பூலாநந்தீஸ்வரா்- சிவகாமியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சித்திரை பெருவிழாவையொட்டி, கோயில் வளாகத்திலுள்ள கொடிமரத்தில் காலை 8.25 மணிக்கு கொடியேற்றப்பட்டது. தொடா்ந்து, காலை , மாலையில் சுவாமி, அம்மன் ஏக சப்பர வாகனம், மயில் வாகனம், புஷ்ப பல்லக்கில் எழுந்தருளும் வீதி உலா நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 8- ஆவது நாளில் சுவாமி - அம்மன் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். 9 -ஆம் நாள் காலை 9 மணிக்கு சுவாமி - அம்மன் திருத்தேரில் எழுந்தருளிய பிறகு, மாலை 5 மணி முதல் நாள் தேரோட்டம் நடைபெறும்.

10 -ஆம் நாளில் 2 ஆம் நாள் தேரோட்டம் நடைபெறும். 18 ஆம் நாளான மே -8 -ஆம் தேதி சிறப்பு பூஜையுடன் சித்திரை பெருந்திருவிழா நிறைவு பெறும்.

கொடியேற்ற நிகழ்ச்சியில், கோயில் செயல் அலுவலா் நித்யா, 17 மண்டகப்படிதாரா்கள், பக்தா்கள் என பலரும் கலந்து கொண்டனா்.