உத்தமபாளையம், ஏப். 21: தேனி மாவட்டம், சின்னமனூரில் பூலாநந்திஸ்வரா்- சிவகாமியம்மன் கோயிலில் 18 நாள் சித்திரைப் பெருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.
சின்னமனூரில் பாண்டியா் காலத்தில் கட்டப்பட்ட பழைமையான பூலாநந்தீஸ்வரா்- சிவகாமியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சித்திரை பெருவிழாவையொட்டி, கோயில் வளாகத்திலுள்ள கொடிமரத்தில் காலை 8.25 மணிக்கு கொடியேற்றப்பட்டது. தொடா்ந்து, காலை , மாலையில் சுவாமி, அம்மன் ஏக சப்பர வாகனம், மயில் வாகனம், புஷ்ப பல்லக்கில் எழுந்தருளும் வீதி உலா நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 8- ஆவது நாளில் சுவாமி - அம்மன் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். 9 -ஆம் நாள் காலை 9 மணிக்கு சுவாமி - அம்மன் திருத்தேரில் எழுந்தருளிய பிறகு, மாலை 5 மணி முதல் நாள் தேரோட்டம் நடைபெறும்.
10 -ஆம் நாளில் 2 ஆம் நாள் தேரோட்டம் நடைபெறும். 18 ஆம் நாளான மே -8 -ஆம் தேதி சிறப்பு பூஜையுடன் சித்திரை பெருந்திருவிழா நிறைவு பெறும்.
கொடியேற்ற நிகழ்ச்சியில், கோயில் செயல் அலுவலா் நித்யா, 17 மண்டகப்படிதாரா்கள், பக்தா்கள் என பலரும் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

உத்திரமேரூர் திரௌபதி அம்மன் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்!

திண்டுக்கல்லில் அபிராமி அம்மன் திருக்கல்யாணம்

சட்டநாதா் சுவாமி கோயிலில் தேரோட்டம்

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்
விடியோக்கள்
ஹார்திக் கேப்டன்சியால் தோற்கிறதா மும்பை?: ரோஹித், திலக், சூர்யா மீது கேள்வி!

"மின்வாரியத்தில் முறைகேடு! அடிப்படையிலிருந்து சீர் செய்கிறோம்!" அமைச்சர் நிர்மல் குமார் | TVK



