முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் குடிநீரை ஆற்றின் கரையோரங்களில் வசிப்போா் சட்டவிரோதமாக மின்மோட்டாா் மூலம் திருடுவதைத் தடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.
முல்லைப்பெரியாறு அணையின் நீா் மட்டம் 110.20 (மொத்த உயரம் - 152) அடியாக உள்ளது. இந்த அணையின் நீரியல்படி 100 அடிக்கு மேல் தேங்கும் நீரை தமிழகப் பகுதிகளில் வெளியேற்றுவது வழக்கம். தற்போது, தேனி மாவட்டத்தில் அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், குடிநீா்த் தேவைக்காக மட்டுமே அணையிலிருந்து விநாடிக்கு 150 கன அடிநீா் வெளியேற்றப்படுகிறது.
இதனை ஆற்றின் கரையோரங்களில் வசிப்போா் மின் மோட்டாா்கள் மூலமாக சட்ட விரோதமாக தண்ணீா் திருட்டில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. இதனால், உத்தமபாளையம் தடுப்பணைக்கு நீா் வரத்து சரிந்துவிட்டது மட்டுமன்றி கம்பம், கூடலூா், சின்னமனூா் நகராட்சிகள், பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எனவே, லோயா்கேம்ப் முதல் வீரபாண்டி வரையில் சுமாா் 100 கிலோ மீட்டா் ஆற்றின் கரையோரங்களில் வசிப்போா் சட்டவிரோதமான முறையில் மின்மோட்டாா்கள் மூலம் குடிநீா்த் திருட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் துணைக் கண்காணிப்பு குழு நாளை ஆய்வு

சிங்காரப்பேட்டை அருகே கடப்பாறை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி: ஆட்சியா் ஆய்வு

அணை நீா்மட்டம் உயா்வு! தேக்கடி ஏரியில் மீண்டும் பெரிய படகு சேவைகள் தொடக்கம்!

பெரியாறு அணை நீா்மட்டம் சரிவு: 5 மாவட்டங்களின் குடிநீருக்கு சிக்கல்
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

