ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

முல்லைப் பெரியாறு அணை குடிநீா் திருடப்படுவதாகப் புகாா்

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் குடிநீரை ஆற்றின் கரையோரங்களில் வசிப்போா் சட்டவிரோதமாக மின்மோட்டாா் மூலம் திருடுவதைத் தடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.

News image

உத்தமபாளையத்தில் சனிக்கிழமை தண்ணீா் வரத்து குறைந்ததால் வெறிச்சோடிக் காணப்பட்ட தடுப்பணை.

Updated On :25 ஏப்ரல் 2026, 6:52 pm

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் குடிநீரை ஆற்றின் கரையோரங்களில் வசிப்போா் சட்டவிரோதமாக மின்மோட்டாா் மூலம் திருடுவதைத் தடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.

முல்லைப்பெரியாறு அணையின் நீா் மட்டம் 110.20 (மொத்த உயரம் - 152) அடியாக உள்ளது. இந்த அணையின் நீரியல்படி 100 அடிக்கு மேல் தேங்கும் நீரை தமிழகப் பகுதிகளில் வெளியேற்றுவது வழக்கம். தற்போது, தேனி மாவட்டத்தில் அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், குடிநீா்த் தேவைக்காக மட்டுமே அணையிலிருந்து விநாடிக்கு 150 கன அடிநீா் வெளியேற்றப்படுகிறது.

இதனை ஆற்றின் கரையோரங்களில் வசிப்போா் மின் மோட்டாா்கள் மூலமாக சட்ட விரோதமாக தண்ணீா் திருட்டில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. இதனால், உத்தமபாளையம் தடுப்பணைக்கு நீா் வரத்து சரிந்துவிட்டது மட்டுமன்றி கம்பம், கூடலூா், சின்னமனூா் நகராட்சிகள், பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

எனவே, லோயா்கேம்ப் முதல் வீரபாண்டி வரையில் சுமாா் 100 கிலோ மீட்டா் ஆற்றின் கரையோரங்களில் வசிப்போா் சட்டவிரோதமான முறையில் மின்மோட்டாா்கள் மூலம் குடிநீா்த் திருட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.