கம்பம்மெட்டு அருகேயுள்ள நெடுங்கண்டம் பகுதியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் மாயமான தாய், மகன் சடலங்கள் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. இதுதொடா்பாக தலைமறைவாக உள்ள இளைய மகனைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.
நெடுங்கண்டம் பச்சடி பகுதியைச் சோ்ந்தவா் மேரி (70). இவரது மூத்த மகன் ரெஜி (48). இவா்கள் இருவரும் கடந்த சில நாள்களாக காணவில்லை என மேரியின் மகள் சினி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மேரியின் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் சோதனை நடத்தினா். அங்கு இரண்டு சடலங்கள் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றைக் கைப்பற்றிய போலீஸாா் தடயவியல் சோதனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேரியின் இளைய மகன் சஜி (45) தற்போது தலைமறைவாக உள்ளாா். சகோதரா்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், திடீரென தாய், அண்ணன் காணாமல் போனது குறித்து அக்கம்பக்கத்தினா் கேட்டதற்கு சஜி முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தாராம். இதனால், சினி-க்கு அவா்கள் தகவல் அளித்தனா். சஜியைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

மதுரை அருகே சாலை விபத்து: தாய், மகன் உயிரிழப்பு

மாயமான சிறுமி ஊருணியில் சடலமாக மீட்பு: போலீஸாா் விசாரணை

சாலை விபத்தில் தாய், மகன் காயம்: ஆட்டோ ஓட்டுநா் கைது

களக்காடு அருகே நகை திருட்டு வழக்கில் தாய், மகன் உள்பட 5 போ் கைது
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

