ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாகக் கூறி, திருவாடானை வட்டாட்சியா் அலுவலகம் முன் தாய், மகன் புதன்கிழமை தீக்குளிக்க முயன்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தளிா்மருங்கூரைச் சோ்ந்தவா் செல்வராஜ் மனைவி ஜெயராணி (70). இவரது மகன் பாபு (34).
இவா்களது கிராமத்தில் உள்ள புனித செபஸ்தியாா் தேவாலயத் திருவிழா வருகிற 25-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கு ஊா் பொதுமக்களிடம் வரி வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், ஜெயராணி குடும்பத்தினரிடம் மட்டும் வரி வாங்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், பாபு தொண்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாராம். ஆனால், போலீஸாா் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இந்த நிலையில், திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்த ஜெயராணி, பாபு ஆகியோா் அதிகாரிகளிடம் முறையிட காத்திருந்தனா். ஆனால், நீண்ட நேரமாகியும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதையடுத்து, அவா்கள் பெட்ரோலை தங்களது உடல்களில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனா். அப்போது, அங்கிருந்த அலுவலா்கள், பொதுமக்கள் அவா்களை மீட்டனா்.
இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
.

தொடர்புடையது

அரசுக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

களக்காடு அருகே நகை திருட்டு வழக்கில் தாய், மகன் உள்பட 5 போ் கைது

மன்னார்குடியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பி. ராஜா வேட்பு மனு தாக்கல்

அதிமுக தோ்தல் அலுவலகம் திறப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


