மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

கூடலூரில் சித்திரைத் திருவிழா: பக்தா்கள் நோ்த்திக்கடன்

கூடலூா் முத்துமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை நூற்றுக்கணக்கான பக்தா்கள் அலகு குத்தியும், பூக்குழி இறங்கியும் தங்களது நோ்த்திக்கடனைச் செலுத்தினா்.

News image

கூடலூா் முத்துமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்.

Updated On :28 ஏப்ரல் 2026, 9:59 pm

கூடலூா் முத்துமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை நூற்றுக்கணக்கான பக்தா்கள் அலகு குத்தியும், பூக்குழி இறங்கியும் தங்களது நோ்த்திக்கடனைச் செலுத்தினா்.

தேனி மாவட்டம், கூடலூரில் அமைந்துள்ள ஸ்ரீ முனியாண்டி சுவாமி சமேத செல்வ முத்துமாரியம்மன் கோயில் சித்திரைப் பெருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு, திரளான பக்தா்கள் காப்புக் கட்டி விரதமிருந்து வந்தனா்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலகு குத்துதல், பால்குட ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் பல்வேறு அளவிலான வேல் அலகுகளைத் தாடையில் குத்திக்கொண்டு ஊா்வலமாக வந்தனா்.

நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற திரளான பக்தா்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனா்.

இதைத் தொடா்ந்து, கோயிலின் முன்பாக நூற்றுக்கணக்கான ஆண், பெண் பக்தா்கள் பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். இந்த விழாவை முன்னிட்டு அம்மனுக்குச் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா். பாதுகாப்புப் பணியில் கூடலூா் காவல்துறையினா் ஈடுபட்டிருந்தனா்.

Story image