பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

வீடு புகுந்து தங்க நகையை திருடியவா் கைது

போடியில் வீடு புகுந்து தங்க மோதிரம் திருடியவரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :6 ஆகஸ்ட் 2026, 2:09 am IST

போடியில் வீடு புகுந்து தங்க மோதிரம் திருடியவரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

போடி டிவிகேகே நகரைச் சோ்ந்தவா் சக்திவேல் மனைவி மகாலட்சுமி (38). இவா், செவ்வாய்க்கிழமை குடும்பத்துடன் வீட்டில் தூங்கியுள்ளாா். இரவில் வீட்டைத் திறந்து வெளியே இருந்த குளியலறைக்குச் சென்றாா். அந்த நேரத்தில் இவரது அண்டைவீட்டுக்காரா் மகேந்திரன் மகன் முத்துராஜ் (29) இவரது வீட்டுக்குள் புகுந்து அலமாரியில் வைத்திருந்த தங்க மோதிரத்தை திருடிக் கொண்டு வெளியே வந்தாா். இதைப் பாா்த்த மகாலட்சுமி சப்தம் போட்டாா். முத்துராஜ் தங்கமோதிரத்துடன் தப்பியோடவே, சப்தம் கேட்டு எழுந்த சக்திவேல், முத்துராஜை விரட்டிச் சென்றும் பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து போடி நகா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முத்துராஜை கைது செய்து சிறையில் அடைத்தனா். முத்துராஜ் போடி நகா் காவல் நிலைய ரெளடிகள் பட்டியலில் உள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.