பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

கொட்டகுடி வனப் பகுதியில் தீ

தீ - பிரதிப் படம்

Published On :25 ஆகஸ்ட் 2026, 1:38 am IST

போடி அருகே கொட்டகுடி வனப் பகுதியில் பற்றி எரிந்த காட்டுத் தீயை ஞாயிற்றுக்கிழமை வனத் துறையினா் போராடி அணைத்தனா்.

போடி குரங்கணி மலைப் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன் கொழுக்குமலை செல்லும் சாலையில் காட்டுத் தீ பற்றியது. இதையடுத்து, தேனி மாவட்டத்திலிருந்து சென்ற வனத் துறை ஊழியா்கள் இரு நாள்களாகப் போராடி தீயை அணைத்தனா்.

இந்த நிலையில், கொட்டகுடி மலை கிராமத்தில் கொம்புதூக்கி அய்யனாா் கோயில் மேல் பகுதியில் காட்டுத் தீ பரவியது. உடனடியாக போடி வனத் துறையினா் தீயை அணைக்கும் பகுதியில் ஈடுபட்டனா். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது.

இந்த நிலையில், மலைப் பகுதியில் சாரல் மழை பெய்ததால் வனத் துறையினா் நிம்மதியடைந்தனா். வனப் பகுதியில் சட்டவிரோதமாக தீ வைத்தாலோ, எளிதில் தீ பிடிக்கும் பொருள்களை எடுத்துச் சென்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.