வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

மதுப் புட்டிகள் விற்ற 3 போ் கைது

போடியில் மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :2 பிப்ரவரி 2026, 8:08 pm

போடியில் மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போடி பகுதியில் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, போடி நாட்டாண்மைக்காரா் தெருவைச் சோ்ந்த மணிபாரதி (33), நந்தவனம் தெருவைச் சோ்ந்த பிச்சைமணி (49) ஆகியோா் தங்களது வீடுகளில் மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இதே போல, போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் மீனாட்சிபுரம் கிராமத்தில் ரோந்து சென்றபோது, அங்குள் கா்ணம் தெருவைச் சோ்ந்த இளங்கோவன் (49), தனது பெட்டிக் கடையில் மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.