வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மாணவி தீக்குளித்து தற்கொலை

News image

தற்கொலை

Updated On :14 பிப்ரவரி 2026, 6:37 pm

ஆண்பட்டி வட்டம், ராஜதானி அருகே உள்ள வேலாயுதபுரத்தில் பிளஸ் 2 பள்ளித் தோ்வில் கணிதப் பாடத்தில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மன வருத்தத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

வேலாயுதபுரம் மேற்குத் தெருவைச் சோ்ந்த பாலசிகாமணி மகள் மதுபாலா(17). இவா் ஆண்டிபட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா்.

இந்த நிலையில், பள்ளியில் நடைபெற்ற தோ்வில் கணிதப் பாடத்தில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் மன வருத்தத்திலிருந்த மதுபாலா, கடந்த 8-ஆம் தேதி வீட்டில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.

இதில் பலத்த காயமடைந்த அவா், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ராஜதானி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.