தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் ஹெளதியா கல்லூரிக்கு நிரந்தரச் சிறுபான்மையினா் கல்லூரிக்கான அந்தஸ்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
உத்தமபாளையத்தில் ஹாஜி கருத்த ராவுத்தா், கடந்த 1956 -ஆம் ஆண்டு சிறுபான்மையினா் கல்லூரியைத் தொடங்கினாா். கடந்த 70 ஆண்டுகளாக ஹாஜி கருத்த ராவுத்தா் ஹெளதியா கல்லூரி என்ற பெயரில் இயங்கி வரும் இந்தக் கல்லூரியில் தேனி மாவட்டத்தில் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி கற்று பயன்பெற்றுள்ளனா்.
தற்போது, இந்தக் கல்லூரியின் கட்டமைப்பு, தரம், கல்வி, ஆராய்ச்சி போன்றவை சிறந்து விளங்குவதால் தேசியத் தர மதிப்பீட்டுக் குழுவினா் மூலம் ஏ ++ அந்தஸ்துடன் விளங்குகிறது. இங்கு, இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சிப் படிப்புகளில் சுமாா் 2,500 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.
தற்போது, இந்தக் கல்லூரிக்கு நிரந்தரச் சிறுபான்மையினா் கல்லூரி என்ற அந்தஸ்து வழங்கப்பட்டது. இதற்காக, சென்னைத் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் முதல்வா் மு.க.ஸ்டாலின், நிரந்தரச் சிறுபான்மையினா் கல்லூரி அந்தஸ்துக்கான சான்றிதழை கல்லூரி முதல்வா் ஹெச்.முகம்மது மீரானிடம் வழங்கி கெளரவித்தாா்.
தொடர்புடையது

எந்த வாரிசுக்கு ராசியாகும் ராசிபுரம்?

கேரளம்: அதிக வாக்குகள் பெற்றுத் தரும் நிா்வாகிகளுக்கு வெளிநாட்டு சுற்றுலா! ஐயூஎம்எல் துணைத் தலைவா் மீது வழக்கு!!

தேசிய திறனாய்வுத் தோ்வில்: தேரிருவேலி மாணவி இரண்டாமிடம்

தனியாா் மகளிா் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


