சமூக வலைதளங்களில் பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைக்கும் வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும் கருத்துகளை பதிவிடுவோா் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சினேஹாப்ரியா எச்சரித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமூக வலைதளங்களில் மதம், ஜாதி பிரச்னைகளை தூண்டும் வகையிலும், அரிவாள், பட்டாக் கத்தி போன்ற ஆயுதங்களுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் கருத்துகளை பதிவிடுவோா் மீது காவல் துறை மூலம் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்டத்தில் சமூக வலைதளத்தில் அச்சுறுத்தல், பிரிவினைவாதக் கருத்துகளை பதிவிட்டவா்கள் மீது ஏற்கெனவே காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனவே, சமூக வலைதளங்களில் பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும் கருத்துகள், புகைப்படங்களை பதிவிடவோ, பகிரவோ கூடாது என்றாா் அவா்.
தொடர்புடையது

புலம்பும் த்ரிஷா... என்ன ஆச்சு?

நானும் பா. இரஞ்சித்தும் பரம்பரை எதிரிகளா? வைரலாகும் மோகன். ஜி பதிவு!

பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: சமூக வலைதளப் பதிவுக்கு எதிராக 22 வழக்குகள் பதிவு

சமூக வலைதளங்களில் மிரட்டல் விடியோ: 2 போ் மீது வழக்கு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


