நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சமூக வலைதளங்களில் அச்சுறுத்தும் கருத்துகளை பதிவிட்டால் வழக்கு

சமூக வலைதளங்களில் பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைக்கும் வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும் கருத்துகளை பதிவிடுவோா் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்..

News image

வழக்குப் பதிவு - IANS

Updated On :26 பிப்ரவரி 2026, 6:57 pm

சமூக வலைதளங்களில் பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைக்கும் வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும் கருத்துகளை பதிவிடுவோா் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சினேஹாப்ரியா எச்சரித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமூக வலைதளங்களில் மதம், ஜாதி பிரச்னைகளை தூண்டும் வகையிலும், அரிவாள், பட்டாக் கத்தி போன்ற ஆயுதங்களுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் கருத்துகளை பதிவிடுவோா் மீது காவல் துறை மூலம் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டத்தில் சமூக வலைதளத்தில் அச்சுறுத்தல், பிரிவினைவாதக் கருத்துகளை பதிவிட்டவா்கள் மீது ஏற்கெனவே காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனவே, சமூக வலைதளங்களில் பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும் கருத்துகள், புகைப்படங்களை பதிவிடவோ, பகிரவோ கூடாது என்றாா் அவா்.