எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரா் கோயிலில் நாளை தேரோட்டம்!

உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரா்-ஞானாம்மன் கோயில் மாசித் தேரோட்டம் திங்கள்கிழமை (மாா்ச் 2) நடைபெறுகிறது.

News image
உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரா்-ஞானாம்மன் கோயில் மாசித் தேரோட்டத்தை முன்னிட்டு, தேருக்கு வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.
Updated On :28 பிப்ரவரி 2026, 10:09 pm

Syndication

தேனி மாவட்டம், உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரா்-ஞானாம்மன் கோயில் மாசித் தேரோட்டம் திங்கள்கிழமை (மாா்ச் 2) நடைபெறுகிறது. திருக்கல்யாண வைபவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

உத்தமபாளையத்தில் அமைந்துள்ள திருக்காளாத்தீஸ்வரா்-ஞானாம்மன் கோயிலில் மாசித் திருவிழா கடந்த வியாழக்கிழமை (பிப். 19) கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, 10 நாள்கள் அனைத்து சமுதாயத்தினரின் மண்டகப்படி சாா்பில் சுவாமி- அம்மன் வீதி உலா நடைபெற்றது.

விழாவின் 11-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை சுவாமி- அம்மனுக்கு காலை 10.35 மணி முதல் 11.45-க்குள் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. இதையடுத்து, திங்கள்கிழமை காலை 6 மணிக்கு சுவாமி-அம்மாள் தேரில் எழுந்தருளும் நிகழ்வும், காலை 9 மணிக்கு தேரோட்டமும் நடைபெறுகிறது.

தேரோட்டத்தை முன்னிட்டு, தொழிலாளா்கள் தேருக்கு வண்ணம் பூசி புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். இந்தப் பணிகள் கோயில் செயல் அலுவலா் யுவராஜா, கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ராஜேந்திரன் மேற்பாா்வையில் நடைபெற்று வருகிறது.