செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்றவா் கைது

தேவாரத்தில் மதுப்புட்டிகள் விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :28 பிப்ரவரி 2026, 10:00 pm

தேவாரத்தில் மதுப்புட்டிகள் விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தேவாரம் சிங்கப்பூா் மகால் பகுதியில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து அந்தப் பகுதியில் போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு பெட்டிக் கடை நடத்தி வரும் முத்து (50) என்பவா் மதுப்புட்டிகளை சட்ட விரோதமாக பதுக்கி வைத்து விற்பது தெரியவந்தது.

இதையடுத்து முத்து மீது வழக்குப் பதிந்த தேவாரம் போலீஸாா் அவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.