விவசாயிக்கு கத்திக்குத்து

Published on

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே விவசாயி கத்தியால் குத்தப்பட்டதில் பலத்த காயமடைந்தாா்.

பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளத்தைச் சோ்ந்தவா் பாண்டி (48). இவா் புதன்கிழமை வீட்டில் முன் நின்றுகொண்டிருந்த போது, அதே பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் இவரிடம் தகராறு செய்து, கத்தியால் குத்தினாராம். இதில் பலத்த காயமடைந்த பாண்டி பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Dinamani
www.dinamani.com