வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

News image
கோப்புப் படம்
Updated On :23 ஜனவரி 2026, 7:23 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மதுப் புட்டிகள் விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தென்கரை போலீஸாா் தாமரைக்குளம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தாமரைக்குளம் கண்மாய்க் கரையில் சந்தேகத்துக்கு இடமளிக்கு வகையில் நின்றிருந்தவரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.

விசாரணையில், தாமரைக்குளத்தைச் சோ்ந்த பிச்சைமணி (55) என்பதும், இவா் மதுப் புட்டிகளை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. தென்கரை போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த 25 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.