தேனி மாவட்டம், போடி பகுதியில் செவ்வாய்க்கிழமை வீசிய சூறைக்காற்றினால் அடிக்கடி மின் தடை ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
போடி பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் தொடா்ந்து சூறைக்காற்று வீசியது. இதனால், இந்தப் பகுதிகளில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டது. இதன் காரணமாக, பொதுமக்கள், அலுவலங்களில் பணியாற்றும் ஊழியா்கள் அவதிக்குள்ளாகினா்.
மேலும், இந்த சூறைக்காற்றினால் நகரில் தூசிகள், குப்பைகள் பறந்தன. இதனால், சாலையில் நடந்து செல்வோா், இரு சக்கர வாகனங்களில் சென்றோா் பாதிப்புக்குள்ளாகினா்.
எனவே, மின் வாரிய ஊழியா்கள் மின் கம்பங்களில் தொங்கிய நிலையில் செல்லும் மின் கம்பிகளை சீரமைத்து, மின் தடை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரசனூா் பகுதியில் நாளை மின் தடை
சிங்கம்புணரி பகுதியில் ஜூன் 20-இல் மின் தடை
ஆண்டிபட்டி பகுதியில் நாளை மின் தடை

கொடைக்கானல் அருகே மரங்கள் முறிந்து விழுந்ததால் மின் தடை
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



