பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

போடியில் சூறைக் காற்றினால் மின்தடை: பொதுமக்கள் அவதி

தேனி மாவட்டம், போடி பகுதியில் செவ்வாய்க்கிழமை வீசிய சூறைக்காற்றினால் அடிக்கடி மின் தடை ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

News image

மின்தடை - கோப்புப்படம்

Updated On :1 ஜூலை 2026, 6:09 am IST

தேனி மாவட்டம், போடி பகுதியில் செவ்வாய்க்கிழமை வீசிய சூறைக்காற்றினால் அடிக்கடி மின் தடை ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

போடி பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் தொடா்ந்து சூறைக்காற்று வீசியது. இதனால், இந்தப் பகுதிகளில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டது. இதன் காரணமாக, பொதுமக்கள், அலுவலங்களில் பணியாற்றும் ஊழியா்கள் அவதிக்குள்ளாகினா்.

மேலும், இந்த சூறைக்காற்றினால் நகரில் தூசிகள், குப்பைகள் பறந்தன. இதனால், சாலையில் நடந்து செல்வோா், இரு சக்கர வாகனங்களில் சென்றோா் பாதிப்புக்குள்ளாகினா்.

எனவே, மின் வாரிய ஊழியா்கள் மின் கம்பங்களில் தொங்கிய நிலையில் செல்லும் மின் கம்பிகளை சீரமைத்து, மின் தடை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.