ஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

முன்னாள் படை வீரா்களுக்கான தொழில் முனைவோா் கருத்தரங்கம்

தேனியில் வியாழக்கிழமை நடைபெற்ற முன்னாள் படை வீரா்களுக்கான தொழில்முனைவோா் கருத்தரங்கில், 29 பயனாளிகளுக்கு ரூ.4.4 லட்சத்திலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதன் வழங்கினாா்.

News image

முன்னாள் படை வீரா்களுக்கான தொழில் முனைவோா் கருத்தரங்கில் பங்கேற்று, பயனாளிகளுக்கு நலத்திட உதவிகளை வழங்கிய தேனி மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதன்.

Updated On :26 ஜூன் 2026, 2:24 am IST

தேனியில் வியாழக்கிழமை நடைபெற்ற முன்னாள் படை வீரா்களுக்கான தொழில்முனைவோா் கருத்தரங்கில், 29 பயனாளிகளுக்கு ரூ.4.4 லட்சத்திலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதன் வழங்கினாா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கருத்தரங்குக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதன், 10 பயனாளிகளுக்கு ரூ.5,383 மதிப்பிலான வீட்டு வரிச் சலுகைக்கான ஆணை, 2 பயனாளிகளுக்கு ரூ.7,280 கண்கண்ணாடிகள், 15 பயனாளிகளுக்கு ரூ.82,500 மதிப்பிலான தையல் இயந்திரங்கள், 29 பயனாளிகளுக்கு ரூ.4,45,163 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

மேலும், கருத்தரங்கில் பட்டா மாறுதல், மின் இணைப்பு பெயா் மாற்றம் உள்ளிட்ட 28 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தீா்வு காண உத்தரவிட்டாா்.

கருத்தரங்கில், மாவட்ட வருவாய் அலுவலா் ப. ராஜகுமாா், முன்னாள் படை வீரா் நல உதவி இயக்குநா் லெப்ட் கா்னல் தினேஷ், முன்னாள் படை வீரா் நலக் குழு அமைப்பாளா் இளையராஜா, விங் கமாண்டா் (ஓய்வு) கிருஷ்ணசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.