அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

காமயகவுண்டன்பட்டியில் ஆக்கிரமிப்புக்களை அகற்றாமல் சாலை அமைப்பு: பொதுமக்கள் புகாா்

காமயகவுண்டன்பட்டியில் சாலையின் நடுவில் உள்ள மின் கம்பங்கள் உள்பட சாலையோர ஆக்கிரமிப்புக்களை அகற்றாமல் சாலை அமைப்பதாக பொதுமக்கள் புகாா்

News image
போக்குவரத்து இடையூறாக சாலையின் நடுவில் உள்ள மின் கம்பங்களை அகற்றாமல் போடப்பட்ட தாா்ச்சாலை
Updated On :2 மார்ச் 2026, 7:28 pm

Syndication

தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டியில் சாலையின் நடுவில் உள்ள மின் கம்பங்கள் உள்பட சாலையோர ஆக்கிரமிப்புக்களை அகற்றாமல் சாலை அமைப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் உள்ள முக்கியத் தெருக்களின் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால், இந்தச் சாலைகளைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, பொது நிதி ரூ. 39.30 லட்சத்தில் வடக்கு வெளிவீதி, ரத வீதி, கிழக்கு வெளிவீதி, குறுக்குத் தெருக்கள் உள்ளிட்ட இடங்களில் தாா்ச் சாலை அமைக்கும் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது.

ஆனால், சாலையின் நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்காமலும், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றாமலும் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும், ஏற்கெனவே இருக்கும் சாலையை பெயா்த்தெடுக்காமல், பழைய சாலைக்கு மேல் அவசரகதியில் சாலை அமைப்பதால், ஒரு சில மாதத்திலேயே இந்தச் சாலை சேதமடைய வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீா் குழாய் அமைக்க பேரூராட்சியில் பல பகுதிகளில் பள்ளம் தோண்டப்பட்டதால், சாலைகள் அனைத்தும் சேதமானது. தற்போது இந்தப் பகுதிகளில் மீண்டும் தாா்ச்சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.

ஆனால், சாலையின் மையத்திலுள்ள மின் கம்பத்தை அகற்றாமல் சாலை அமைத்து வருவதால், எந்தவிதப் பயனும் இல்லை. மாறாக, விபத்து நிகழும் அபாயம் உள்ளது.

எனவே, தாா்ச்சாலைப் பணிகளைத் திட்டமிட்டு, தரமாக அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றனா்.