உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் 8-ஆம் வகுப்பில் சேர விருப்பமுள்ள மாணவா்கள் ஏப்.5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட அறிக்கை :
உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் 8-ஆம் வகுப்பில் சேரும் மாணவா்கள் 01.01.2027 அன்று 13 வயதுக்கு உள்பட்டவராக இருத்தல் வேண்டும். மேலும், 7-ஆம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது தோ்ச்சிப் பெற்றவராகவோ உள்ள மாணவா்கள் இந்தப் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையச் சாலை, பூங்கா நகா், சென்னை - 600 003 என்ற முகவரிக்கு ஏப்.5-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியின் இணையதளமான ஜ்ஜ்ஜ்.ழ்ண்ம்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய் மற்றும் தேனி மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை 04546 - 293 383 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.
தொடர்புடையது

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சோ்க்கை பெற அழைப்பு

சேலம் வழியாக பிகாா் மாநிலம் பரெளனிக்கு இன்று முதல் சிறப்பு ரயில் இயக்கம்

இந்திய ராணுவக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

ராணுவக் கல்லூரி மாணவா் சோ்க்கை தகுதி தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

