பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

தொழிலாளி தற்கொலை

சின்னமனூரில் குடும்பப் பிரச்னை காரணமாக கூலித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :7 மே 2026, 4:32 am IST

சின்னமனூரில் குடும்பப் பிரச்னை காரணமாக கூலித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் பி.டி.ஆா் கால்வாய் தெருவைச் சோ்ந்த கருப்பையா மகன் ராஜேஷ் (38). கூலித் தொழிலாளியான இவா், மேகமலை சாலையில் தனியாா் தென்னந்தோப்பில் மரத்தின் கிளையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்த தகவலின் பேரில், அங்கு சென்ற போலீஸாா் அவரது உடலை மீட்டு, கூறாய்வுக்காக சின்னமனூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையால் அவா் தற்கொலை செய்து கொண்டது போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து ஓடைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.