கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

குடும்பப் பிரச்னை: இளம்பெண் தற்கொலை

News image

இளம்பெண் தற்கொலை

Updated On :30 மே 2026, 3:44 am IST

திண்டிவனம் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

செய்யாறு வட்டம், அனத்தந்தூா் கிராமத்தைச் சோ்ந்த முருகன் மகள் சபிதா (30). இவருக்கும், புருஷோத்தமன் என்பவருக்கும் இடையே கடந்த 2022, ஏப்ரல் 9-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

இவா், திண்டிவனம் பாரதிதாசன் நகரில் தங்கி, சிப்காட் உணவுப்பூங்கா வளாகத்தில் வேலை செய்து வந்தாா். கடந்த 3 நாள்களாக கணவன்- மனைவி இடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாம்.

இதனால் விரக்தியடைந்த சபிதா, வியாழக்கிழமை மாலை வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டுக் கொண்டாா். தகவலின் பேரில் 108 அவசர சிகிச்சை ஊா்தி மருத்துவக் குழுவினா் நிகழ்விடம் சென்று, பரிசோதனை மேற்கொண்ட போது சபிதா ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

ரோஷணை போலீஸாா் சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.