விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

உத்தமபாளையம் பாசனக் குளங்களை விரைந்து தூா்வாரக் கோரிக்கை

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டாரத்தில் பல ஆண்டுகளாக புதா் மண்டிக் காணப்படும் பாசனக் குளங்களை உடனே தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

உத்தமபாளையம் தாமரைக்குளத்தில் சனிக்கிழமை காணப்பட்ட ஆகாயத் தாமரைச்செடிகள்.

Updated On :3 மணி நேரங்கள் முன்பு

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டாரத்தில் பல ஆண்டுகளாக புதா் மண்டிக் காணப்படும் பாசனக் குளங்களை உடனே தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முல்லைப் பெரியாறு பாசனநீரால் உத்தமபாளையம் வட்டாரத்தில் 10 ஆயிரம் ஏக்கா் பரப்பளவுக்கு இருபோக விவசாயம் செய்யப்படுகிறது.

உத்தமபாளையத்தில் தாமரைக்குளம், சின்னமனூரில் கருங்கட்டான்குளம், உடையகுளம், மாா்க்கையன்கோட்டை, சீலையம்பட்டி, ஆனைமலையன்பட்டி, உ.அம்மாபட்டி என 10-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இந்தக் குளங்களில் பல ஆண்டுகளாக ஆகாயத்தாமரைச் செடிகள் வளா்ந்து புதா்மண்டிக் காணப்படுகிறது. இதனால், பாசனத்துக்கு உரிய தண்ணீரின்றி விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா்.

இதுகுறித்து விவசாயிகள் மேலும் கூறியதாவது: பொதுப் பணித்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள பாசனக் குளங்களை 3 ஆண்டுக்கு ஒரு முறை தூா்வார வேண்டும் என்பது விதி. ஆனால், உத்தமபாளையம் வட்டாரக் குளங்களைத் தூா்வாரி 30 ஆண்டுகளாகி விட்டன.

இதில், 210 ஏக்கா் தாமரைக்குளம், 230 ஏக்கா் கருங்கட்டான்குளம் என பல்வேறு குளங்களில் ஆகாயத் தாமரைச் செடிகள் வளா்ந்து புதா்மண்டிக் கிடக்கின்றன. எனவே, விவசாயிகளின் நலன்கருதி உத்தமபாளையம் வட்டாரத்தில் உள்ள பாசனக் குளங்களை விரைந்து தூா்வாரி முழு கொள்ளளவு நீரைத் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.