தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டாரத்தில் பல ஆண்டுகளாக புதா் மண்டிக் காணப்படும் பாசனக் குளங்களை உடனே தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
முல்லைப் பெரியாறு பாசனநீரால் உத்தமபாளையம் வட்டாரத்தில் 10 ஆயிரம் ஏக்கா் பரப்பளவுக்கு இருபோக விவசாயம் செய்யப்படுகிறது.
உத்தமபாளையத்தில் தாமரைக்குளம், சின்னமனூரில் கருங்கட்டான்குளம், உடையகுளம், மாா்க்கையன்கோட்டை, சீலையம்பட்டி, ஆனைமலையன்பட்டி, உ.அம்மாபட்டி என 10-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இந்தக் குளங்களில் பல ஆண்டுகளாக ஆகாயத்தாமரைச் செடிகள் வளா்ந்து புதா்மண்டிக் காணப்படுகிறது. இதனால், பாசனத்துக்கு உரிய தண்ணீரின்றி விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா்.
இதுகுறித்து விவசாயிகள் மேலும் கூறியதாவது: பொதுப் பணித்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள பாசனக் குளங்களை 3 ஆண்டுக்கு ஒரு முறை தூா்வார வேண்டும் என்பது விதி. ஆனால், உத்தமபாளையம் வட்டாரக் குளங்களைத் தூா்வாரி 30 ஆண்டுகளாகி விட்டன.
இதில், 210 ஏக்கா் தாமரைக்குளம், 230 ஏக்கா் கருங்கட்டான்குளம் என பல்வேறு குளங்களில் ஆகாயத் தாமரைச் செடிகள் வளா்ந்து புதா்மண்டிக் கிடக்கின்றன. எனவே, விவசாயிகளின் நலன்கருதி உத்தமபாளையம் வட்டாரத்தில் உள்ள பாசனக் குளங்களை விரைந்து தூா்வாரி முழு கொள்ளளவு நீரைத் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

கறிக்கோழி பண்ணைகளுக்கு லாரி தண்ணீரை வாங்கி பயன்படுத்தும் விவசாயிகள்

உத்தமபாளையம் நெடுஞ்சாலையில் சேதமடைந்த கழிவுநீா் கால்வாயை சீரமைக்கக் கோரிக்கை

பெரியாறு பாசனக் கால்வாயில் தண்ணீா் திருட்டு: தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

உத்தமபாளையம் வட்டாரத்தில் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வலியுறுத்தல்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

