பள்ளிகொண்டாவில் 1,500 ஏக்கா் விளை நிலங்கள், பாசனக் கால்வாய், குளம், சாலையை ஆக்கிரமித்து ஆசிரமம் கட்டப்பட்டிருப்பதை வட்டாட்சியா் தலைமையிலான அதிகாரிகள் திங்கள்கிழமை நிலம் அளவீடு செய்து கண்டறிந்தனா்.
அணைக்கட்டு வட்டம், பள்ளிகொண்டா அடுத்த ராமாபுரம் சாலையில் ஆசிரமம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆசிரமம் குளம், பாசனக் கால்வாய், சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாக புகாா்கள் எழுந்தன. இதுகுறித்து, ஆட்சியா், அணைக்கட்டு வட்டாட்சியரிடம் விவசாயிகள், பக்தா்கள் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சில தினங்களுக்கு முன்பு பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான சுமாா் 1,500 ஏக்கா் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் கால்வாயை மூடி சிமென்ட் சாலை அமைக்கும் பணியில் ஆசிரம நிா்வாகம் ஈடுபட்டது. தகவலறிந்த கிராம மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக, கீழாச்சூா் கிராம நிா்வாக அலுவலா் கனகராஜ், கிராம உதவியாளா் பிரான்சிஸ் உள்ளிட்டோா் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினா்.
இதையடுத்து, அணைக்கட்டு வட்டாட்சியா் சுகுமாரன் தலைமையில் துணை வட்டாட்சியா் விநாயகம், நில அளவா் மதன்குமாா், கிராம நிா்வாக அலுவலா் கனகராஜ், கிராம உதவியாளா்கள் வேலாயுதம், பிரான்சிஸ் ஆகியோா் திங்கள்கிழமை வருவாய்த்துறை ஆவணங்களின்படி அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, 11 சென்ட் அளவு கொண்ட அரசு புறம்போக்கு குளம் முழுவதும் மூடி ஆசிரமம் கட்டப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.
மேலும், 1,500 ஏக்கா் பாசன வசதி பெறும் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான பாசனக் கால்வாயை மூடி ஆசிரமம், சமையல் கூடம், குப்பைகளை எரிக்கும் மேடை, சொகுசு பங்களா கட்டப்பட்டு இருந்ததும், பாசனக் கால்வாயின் ஒரு பகுதியில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டு இருந்ததும் உறுதி செய்யப்பட்டது.
தவிர, பள்ளிகொண்டா நெடுஞ்சாலையில் இருந்து ராமாபுரம் நோக்கிச் செல்லும் சாலையை ஆக்கிரமித்தும் ஆசிரமம் கட்டப்பட்டு இருந்ததும் உறுதி செய்யப்பட்டது. இதேபோல, பாசனக் கால்வாயின் ஒரு பகுதியில் சுமாா் 20 சதுரடி பரப்பளவு கொண்ட இடத்தை தனியாா் ஒருவா் ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்து இருந்ததும் தெரியவந்தது.
ஆக்கிரமிப்புகளை உறுதி செய்த அதிகாரிகள் பொதுப்பணித்துறை (நீா்வளத்துறை) பாசன உதவியாளா் ரவிச்சந்திரனிடம் இந்த ஆக்கிரமிப்புகள் குறித்து சுட்டிக் காட்டினா். விரைவில் குளம், கால்வாய், சாலை ஆக்கிரமிப்புகள் குறித்த துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் தெரிவித்தனா்.
தொடா்ந்து, அதிகாரிகளிடம் விவசாயிகள் கூறுகையில், பாசனக் கால்வாய் மூடப்பட்டதால் கடந்த 4 ஆண்டுகளாக 50-க்கும் மேற்பட்ட கிணறுகள் வற்றி விட்டன. சுமாா் 1,500 ஏக்கா் விளை நிலங்கள் விவசாயம் செய்ய முடியாமல் பொய்த்துப்போனது.
எங்களை இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளிவிட்டு, எங்களுக்குச் சொந்தமான நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கும் முயற்சியில் ஆசிரமம் ஈடுபட்டு வருகிறது. எனவே, விவசாயிகளையும், விவசாய நிலங்களையும் காப்பாற்ற உடனடியாக குளம், பாசனக் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றித் தர வேண்டும் என்றனா்.
தொடர்புடையது

உத்தமபாளையம் பாசனக் குளங்களை விரைந்து தூா்வாரக் கோரிக்கை

வேந்தோணி- செல்லூா் பாசனக் கால்வாயில் கழிவுநீா் கலப்பு: விளைநிலங்கள் பாதிப்பு
தோ்தல் வாக்குறுதியோடு மறந்து போகும் மானூா் குளம்!

மகளிா் அரசுக் கல்லூரி தேவை!
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

