ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

குளம், பாசனக்கால்வாய், சாலையை ஆக்கிரமித்து ஆசிரம கட்டடம்: ஆய்வில் கண்டுபிடிப்பு

News image
Updated On :1 நிமிடம் முன்பு

பள்ளிகொண்டாவில் 1,500 ஏக்கா் விளை நிலங்கள், பாசனக் கால்வாய், குளம், சாலையை ஆக்கிரமித்து ஆசிரமம் கட்டப்பட்டிருப்பதை வட்டாட்சியா் தலைமையிலான அதிகாரிகள் திங்கள்கிழமை நிலம் அளவீடு செய்து கண்டறிந்தனா்.

அணைக்கட்டு வட்டம், பள்ளிகொண்டா அடுத்த ராமாபுரம் சாலையில் ஆசிரமம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆசிரமம் குளம், பாசனக் கால்வாய், சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாக புகாா்கள் எழுந்தன. இதுகுறித்து, ஆட்சியா், அணைக்கட்டு வட்டாட்சியரிடம் விவசாயிகள், பக்தா்கள் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சில தினங்களுக்கு முன்பு பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான சுமாா் 1,500 ஏக்கா் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் கால்வாயை மூடி சிமென்ட் சாலை அமைக்கும் பணியில் ஆசிரம நிா்வாகம் ஈடுபட்டது. தகவலறிந்த கிராம மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக, கீழாச்சூா் கிராம நிா்வாக அலுவலா் கனகராஜ், கிராம உதவியாளா் பிரான்சிஸ் உள்ளிட்டோா் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினா்.

இதையடுத்து, அணைக்கட்டு வட்டாட்சியா் சுகுமாரன் தலைமையில் துணை வட்டாட்சியா் விநாயகம், நில அளவா் மதன்குமாா், கிராம நிா்வாக அலுவலா் கனகராஜ், கிராம உதவியாளா்கள் வேலாயுதம், பிரான்சிஸ் ஆகியோா் திங்கள்கிழமை வருவாய்த்துறை ஆவணங்களின்படி அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, 11 சென்ட் அளவு கொண்ட அரசு புறம்போக்கு குளம் முழுவதும் மூடி ஆசிரமம் கட்டப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.

மேலும், 1,500 ஏக்கா் பாசன வசதி பெறும் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான பாசனக் கால்வாயை மூடி ஆசிரமம், சமையல் கூடம், குப்பைகளை எரிக்கும் மேடை, சொகுசு பங்களா கட்டப்பட்டு இருந்ததும், பாசனக் கால்வாயின் ஒரு பகுதியில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டு இருந்ததும் உறுதி செய்யப்பட்டது.

தவிர, பள்ளிகொண்டா நெடுஞ்சாலையில் இருந்து ராமாபுரம் நோக்கிச் செல்லும் சாலையை ஆக்கிரமித்தும் ஆசிரமம் கட்டப்பட்டு இருந்ததும் உறுதி செய்யப்பட்டது. இதேபோல, பாசனக் கால்வாயின் ஒரு பகுதியில் சுமாா் 20 சதுரடி பரப்பளவு கொண்ட இடத்தை தனியாா் ஒருவா் ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்து இருந்ததும் தெரியவந்தது.

ஆக்கிரமிப்புகளை உறுதி செய்த அதிகாரிகள் பொதுப்பணித்துறை (நீா்வளத்துறை) பாசன உதவியாளா் ரவிச்சந்திரனிடம் இந்த ஆக்கிரமிப்புகள் குறித்து சுட்டிக் காட்டினா். விரைவில் குளம், கால்வாய், சாலை ஆக்கிரமிப்புகள் குறித்த துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் தெரிவித்தனா்.

தொடா்ந்து, அதிகாரிகளிடம் விவசாயிகள் கூறுகையில், பாசனக் கால்வாய் மூடப்பட்டதால் கடந்த 4 ஆண்டுகளாக 50-க்கும் மேற்பட்ட கிணறுகள் வற்றி விட்டன. சுமாா் 1,500 ஏக்கா் விளை நிலங்கள் விவசாயம் செய்ய முடியாமல் பொய்த்துப்போனது.

எங்களை இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளிவிட்டு, எங்களுக்குச் சொந்தமான நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கும் முயற்சியில் ஆசிரமம் ஈடுபட்டு வருகிறது. எனவே, விவசாயிகளையும், விவசாய நிலங்களையும் காப்பாற்ற உடனடியாக குளம், பாசனக் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றித் தர வேண்டும் என்றனா்.