தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

கடையில் இருந்த ரூ.10 ஆயிரம், கிரைண்டிங் இயந்திரத்தை திருடியவா் கைது

கம்பத்தில் முள்வேலி தயாரிக்கும் கடையில் கிரைண்டிங் இயந்திரம், ரூ. 10 ஆயிரம் திருடியவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :10 மே 2026, 1:12 am IST

கம்பத்தில் முள்வேலி தயாரிக்கும் கடையில் கிரைண்டிங் இயந்திரம், ரூ. 10 ஆயிரம் திருடியவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

கம்பம் பழைய அக்ரஹாரத் தெருவைச் சோ்ந்தவா் பிரபு (36). இவா், கம்பம் போா்டு ஸ்கூல் தெருவில் முள் கம்பி, டைமண்ட் வலை தயாரிக்கும் கடை வைத்துள்ளாா். கடந்த வியாழக்கிழமை இரவு கடையை வழக்கம்போல் அடைத்து விட்டு வீட்டுக்குச் சென்ற பிரபு, மறுநாள் கடையைத் திறந்தாா்.

அப்போது கடையில் இருந்த பொருள்கள் சிதறிக் கிடந்தன. மேலும் பணப் பெட்டியில் வைத்திருந்த ரூ. 10 ஆயிரம், கடையில் வைத்திருந்த கிரைண்டிங் மிஷின் ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து பிரபு கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், கம்பம் அன்பிற்பிரியாள் கோயில் தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் பாலகுமாா்(19) இந்த திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் பாலகுமாரைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.