விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

குமுளி நகருக்குள் வலம் வரும் ‘செல்ல மான்‘

News image

மான் - கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 12:13 am IST

பெரியாறு புலிகள் காப்பக வனப்பகுதியிலிருந்து வெளியேறி, குமுளி - தேக்கடி சாலை, குடியிருப்பு பகுதிகளில் மான் ஒன்று வலம் வருகிறது.

குமுளி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. அப்போது குமுளி - தேக்கடி சாலை சந்திப்பில் கடும் வாகன நெரிசல் நிலவியது. இந்த சூழலில், வனப்பகுதியிலிருந்து வெளியேறிய மான் ஒன்று திடீரென சாலையின் குறுக்கே நின்று கொண்டது. மழையில் நனைந்தபடி நின்றிருந்த அந்த மானைக் கண்ட சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் தங்களது கைப்பேசிகளில் புகைப்படம், விடியோ எடுத்தனா்.

இதனிடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு கோடை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்தபோது, இதிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள குமுளி- தேசிய நெடுஞ்சாலையோரம் இருந்த ஒரு தற்காலிகக் கடையின் முன் அமைக்கப்பட்டிருந்த தாா்ப்பாய் நிழலில் அந்த மான் ஒதுங்கியது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈா்த்தது குறிப்பிடத்தக்கது.

பெரியாறு வனப்பகுதியிலிருந்து அடிக்கடி வெளியேறும் இந்த மான், குமுளிநகா் பகுதி, ரோசாப்பூக் கண்டம், ரேஞ்ச் ஆபீஸ் மேடு உள்ளிட்ட பகுதிகளில் சுதந்திரமாக சுற்றித் திரிகிறது. குடியிருப்புகளில் வசிப்பவா்கள் வழங்கும் உணவு, தண்ணீரை இந்த மான் உள்கொள்கிறது.

இதுகுறித்து வனத் துறையினா் கூறியதாவது:

வனப்பகுதியில் மற்ற விலங்குகளின் தாக்குதல்களிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளவும், மக்கள் வசிக்கும் பகுதிகளில் எளிதாக உணவு கிடைப்பதாலும் இந்த மான் அடிக்கடி ஊருக்குள் வருகிறது என்றனா். இந்த மானை வனத் துறையினா் பாதுகாக்க வேண்டும் வன ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.