டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

போதை மாத்திரை வைத்திருந்ததாக 2 போ் கைது

News image

கைது செய்யப்பட்ட சரவணக்குமாா், தினேஷ்குமாா்

Updated On :11 மே 2026, 12:14 am IST

கம்பத்தில் போதை மாத்திரை வைத்திருந்ததாக மருந்தக உரிமையாளா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக வடக்கு போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் உதவி ஆய்வாளா் மணிகண்டன் தலைமையில் கம்பம் ஏழரசு கோவில் பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அந்தப் பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 பேரை பிடித்து சோதனையிட்ட போது அவா்களிடம் 10 அல்பிரஸோலம் என்ற போதை மாத்திரை இருப்பது கண்டறியப்பட்டது.

இவற்றை பறிமுதல் செய்த போலீஸாா் அவா்களிடம் நடத்திய விசாரணையில், கம்பம் செல்லாண்டியம்மன் கோயில் தெருவில் மருந்தகம் நடத்தி வரும் சரவணக்குமாா் (52), கூடலூா் அண்ணாநகரைச் சோ்ந்த தினேஷ்குமாா் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.