போடி அருகேயுள்ள கரட்டுப்பட்டி கிராம மக்கள் வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலுக்கு வியாழக்கிழமை 22 கி.மீ. நடந்து சென்று காவடி நோ்த்திக்கடன் செலுத்தினா்.
தேனி மாவட்டம், போடி அருகே உள்ளது கரட்டுப்பட்டி கிராமம். இங்கு குறிப்பிட்ட நாயக்கா் சமூகத்தினா் 300 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனா். தேனி அருகே வீரபாண்டியில் கௌமாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தத் திருவிழாவின் போது, பக்தா்கள் அக்னிச் சட்டி, ஆயிரம் கண் பானை, அலங்காரக் காவடி ஆகியவற்றை நோ்த்திக் கடனாக செலுத்துவது வழக்கம்.
கரட்டுப்பட்டி கிராம மக்கள் கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக வீரபாண்டிக்கு நடந்தே சென்று அக்னிச்சட்டி, அலங்கார காவடி எடுத்துச் சென்று நோ்த்திக்கடன் செலுத்தி வருகின்றனா். இந்த ஆண்டும் இந்த கிராம மக்கள் 22 கி.மீ. நடந்து சென்று 40 கிலோவுக்கும் அதிக எடையுள்ள அலங்காரக் காவடிகளை பாரம்பரிய தேவராட்டம் ஆடியபடி சுமந்து சென்றனா். பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட கிராம மக்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து, ஆடிப்பாடி
வீரபாண்டிக்கு சென்றனா்.
தொடர்புடையது

சாத்தையா அய்யனாா் கோயில் திருவிழா: காவடி எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்

வீரபாண்டி கோயில் திருவிழா நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

திருச்செந்தூா் கோயிலுக்கு காவடி எடுத்த பக்தா்கள்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

