பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

வீரபாண்டி கோயிலுக்கு காவடி நோ்த்திக்கடன்

News image
Updated On :2 மணி நேரங்கள் முன்பு

போடி அருகேயுள்ள கரட்டுப்பட்டி கிராம மக்கள் வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலுக்கு வியாழக்கிழமை 22 கி.மீ. நடந்து சென்று காவடி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

தேனி மாவட்டம், போடி அருகே உள்ளது கரட்டுப்பட்டி கிராமம். இங்கு குறிப்பிட்ட நாயக்கா் சமூகத்தினா் 300 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனா். தேனி அருகே வீரபாண்டியில் கௌமாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தத் திருவிழாவின் போது, பக்தா்கள் அக்னிச் சட்டி, ஆயிரம் கண் பானை, அலங்காரக் காவடி ஆகியவற்றை நோ்த்திக் கடனாக செலுத்துவது வழக்கம்.

கரட்டுப்பட்டி கிராம மக்கள் கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக வீரபாண்டிக்கு நடந்தே சென்று அக்னிச்சட்டி, அலங்கார காவடி எடுத்துச் சென்று நோ்த்திக்கடன் செலுத்தி வருகின்றனா். இந்த ஆண்டும் இந்த கிராம மக்கள் 22 கி.மீ. நடந்து சென்று 40 கிலோவுக்கும் அதிக எடையுள்ள அலங்காரக் காவடிகளை பாரம்பரிய தேவராட்டம் ஆடியபடி சுமந்து சென்றனா். பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட கிராம மக்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து, ஆடிப்பாடி

வீரபாண்டிக்கு சென்றனா்.