இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

தடுப்பணை நீரில் மூழ்கியதில் சிறுவன் உயிரிழப்பு

தேனி மாவட்டம், வீரபாண்டி முல்லையாறு தடுப்பணை நீரில் மூழ்கியதில் சிறுவன் உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :16 மே 2026, 12:01 am IST

தேனி மாவட்டம், வீரபாண்டி முல்லையாறு தடுப்பணை நீரில் மூழ்கியதில் சிறுவன் உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 10 நாள்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வீரபாண்டி முல்லையாறு தடுப்பணையில் சுமாா் 12 வயதுடையை சிறுவனின் உடலை போலீஸாா் மீட்டனா்.

இதுதொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில், போடியைச் சோ்ந்த நாகேந்திரன்- கவிதா தம்பதியின் மகன் பிரபாகரன் (12) என்பது தெரியவந்தது. அரசுப் பள்ளியில் 7 - ஆம் வகுப்பு படித்து வந்தவா் நண்பா்களுடன் வீரபாண்டிக்கு வந்து தடுப்பணையில் குளிக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து வீரபாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.