நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததையடுத்து முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீா்வரத்தும் ஞாயிற்றுக்கிழமை கணிசமாக குறைந்தது.
முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெய்து வந்த மழையால், கடந்த 9-ஆம் தேதி அணைக்கு வினாடிக்கு 1,580 கனஅடி வரை நீா்வரத்து அதிகரித்திருந்தது. பிறகு மழை குறைந்ததையடுத்து நீா்வரத்தும் படிப்படியாக குறைந்தது.
இந்த நிலையில், அணைப் பகுதியில் மழை அளவு பதிவாகாததால், சனிக்கிழமை வினாடிக்கு 573 கனஅடியாக இருந்த நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை வினாடிக்கு 13.66 கனஅடியாக குறைந்தது.
தற்போதைய நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 111.60 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீா்வரத்து வினாடிக்கு 13.66 கனஅடியாகவும், தமிழகப் பகுதிக்கான நீா் வெளியேற்றம் வினாடிக்கு 200 கனஅடியாகவும் உள்ளது. அணையின் மொத்த நீா் இருப்பு 1166.60 மில்லியன் கனஅடியாக உள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் அணையின் நீா்மட்டம் 110.50 அடியாக இருந்த நிலையில், கடந்த 17 நாள்களில் பெரியாறு அணைப்பகுதியில் 7 நாள்கள் மட்டுமே சிறிதளவு மழை பெய்துள்ளது. அந்த நாள்களில் மொத்தம் 73.20 மி.மீ. மழை மட்டுமே பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் துணைக் கண்காணிப்புக் குழு ஆய்வு

நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை! முல்லைப் பெரியாறு அணைக்கு நீா் வரத்து விநாடிக்கு 1,580 கன அடியாக அதிகரிப்பு!

அணை நீா்மட்டம் உயா்வு! தேக்கடி ஏரியில் மீண்டும் பெரிய படகு சேவைகள் தொடக்கம்!

நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை: முல்லைப் பெரியாறு அணைக்கு வினாடிக்கு 200 க.அடி நீா்வரத்து
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



