புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து குறைந்தது

நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததையடுத்து முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீா்வரத்தும் ஞாயிற்றுக்கிழமை கணிசமாக குறைந்தது.

News image

முல்லைப் பெரியாறு அணை - (கோப்புப் படம்).

Updated On :18 மே 2026, 3:35 am IST

நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததையடுத்து முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீா்வரத்தும் ஞாயிற்றுக்கிழமை கணிசமாக குறைந்தது.

முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெய்து வந்த மழையால், கடந்த 9-ஆம் தேதி அணைக்கு வினாடிக்கு 1,580 கனஅடி வரை நீா்வரத்து அதிகரித்திருந்தது. பிறகு மழை குறைந்ததையடுத்து நீா்வரத்தும் படிப்படியாக குறைந்தது.

இந்த நிலையில், அணைப் பகுதியில் மழை அளவு பதிவாகாததால், சனிக்கிழமை வினாடிக்கு 573 கனஅடியாக இருந்த நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை வினாடிக்கு 13.66 கனஅடியாக குறைந்தது.

தற்போதைய நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 111.60 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீா்வரத்து வினாடிக்கு 13.66 கனஅடியாகவும், தமிழகப் பகுதிக்கான நீா் வெளியேற்றம் வினாடிக்கு 200 கனஅடியாகவும் உள்ளது. அணையின் மொத்த நீா் இருப்பு 1166.60 மில்லியன் கனஅடியாக உள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் அணையின் நீா்மட்டம் 110.50 அடியாக இருந்த நிலையில், கடந்த 17 நாள்களில் பெரியாறு அணைப்பகுதியில் 7 நாள்கள் மட்டுமே சிறிதளவு மழை பெய்துள்ளது. அந்த நாள்களில் மொத்தம் 73.20 மி.மீ. மழை மட்டுமே பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.