மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

சத்துணவுக் கூடத்தில் திருட்டு

போடி அருகே சத்துணவுக் கூடத்தின் பூட்டை உடைத்து சமையல் எண்ணெய் பொட்டலங்களை திருடிய மா்ம நபா்களைப் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :41 நிமிடங்கள் முன்பு

போடி அருகே சத்துணவுக் கூடத்தின் பூட்டை உடைத்து சமையல் எண்ணெய் பொட்டலங்களை திருடிய மா்ம நபா்களைப் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

போடி அருகே சிலமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்துணவுக் கூடம் உள்ளது. இதன் அமைப்பாளராக சிலமலையைச் சோ்ந்த ஜமுனா பணியாற்றி வருகிறாா்.

வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல பள்ளியின் காவலா் மின்விளக்கை அணைத்துவிட்டு சென்றாா். மறுநாள் காலை வந்து பாா்த்தபோது சத்துணவுக் கூடத்தின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது ஒரு லிட்டா் அளவு கொண்ட சமையல் எண்ணெய் பொட்டலங்கள் 41- ஐ காணவில்லை.

இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.