பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்பு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

மதுக் கடையை மூடக்கோரி பெண்கள் போராட்டம்

தேனி மாவட்டம், வருசநாடு அருகே மூலக்கடையில் உள்ள அரசு மதுக் கடையை மூடக்கோரி பெண்கள் வியாழக்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

வருசநாடு அருகேயுள்ள மூலக்கடை அரசு மதுக் கடையை மூடக்கோரி கடை முன் வியாழக்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.

Updated On :22 மே 2026, 2:54 am IST

தேனி மாவட்டம், வருசநாடு அருகே மூலக்கடையில் உள்ள அரசு மதுக் கடையை மூடக்கோரி பெண்கள் வியாழக்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வருசநாடு அருகே மூலக்கடையில் அரசு மதுக் கடை (டாஸ்மாக்) உள்ளது. இந்தக் கடையில் மது அருந்துபவா்களால் பாதிக்கப்படுவதாக, அந்தப் பகுதி பெண்கள் மாவட்ட நிா்வாகத்திடம் புகாா் செய்தும் நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதையடுத்து, அந்தப் பகுதி பெண்கள் வியாழக்கிழமை இரவு அரசு மதுக் கடையை மூடக்கோரி கடை முன் 50 - க்கும் அதிகமான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, கடமலைக்குண்டு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பெண்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், அரசு மதுக் கடை மூடப்பட்டது.

இதையடுத்து, பெண்கள் பேராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.