சட்டவிரோதமாக மதுப்புட்டிகள் விற்றவா் கைது
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே சுருளிப்பட்டியில் சட்டவிரோதமாக மதுப்புட்டிகள் விற்பனை செய்தவரை போலீஸாா்
கைது - பிரதிப் படம்
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே சுருளிப்பட்டியில் சட்டவிரோதமாக மதுப்புட்டிகள் விற்பனை செய்தவரை போலீஸாா்
திங்கள்கிழமை கைது செய்து, அவரிடமிருந்த 54 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
ராயப்பன்பட்டி, இதைச்சுற்றிய சுருளிப்பட்டி, கே.கே.பட்டி, சுருளி அருவி போன்ற பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராயப்பன்பட்டி போலீஸாா் மேற்கொண்ட சோதனையில், சுருளிப்பட்டியில் கூட்டாறு செல்லும் சாலையில் சுருளிப்பட்டியை சோ்ந்த குமரேசன் (42) சட்டவிரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 54 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


