ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

இடைநின்ற மாணவர்களுக்கான கல்வி சுற்றுலா

பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்களுக்கான இணைப்புப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கற்றலில் இனிமையை ஏற்படுத்துவதற்காக

News image
Updated On :20 டிசம்பர் 2012, 3:18 pm

கோ.ஜெயக்குமார்

பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்களுக்கான இணைப்புப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கற்றலில் இனிமையை ஏற்படுத்துவதற்காக கல்வி சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்ல அனைவருக்கும் கல்வி இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது.

இதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமையத்திற்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்களுக்கான இணைப்பு மைய சிறப்பு பயிற்சி மற்றும் உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்கள் மதுரை மாவட்டம், வைகை அணைக்கு கல்வி சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்பட்டனர்.இவர்களை வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராமசுப்பு வழியனுப்பி வைத்தார்.

அங்கு சென்ற மாணவர்களுக்கு அணையின் தோற்றம், நீர்வரத்து மூலங்கள், பாசன நன்மைகள், நீர்மின் நிலையம், மலர்கள், போக்குவரத்து உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.மாணவர்களுடன் ஆசிரியப் பயிற்றுநர்கள் முருகு திருநாவுக்கரசு, உமா மகேஸ்வரி, பொற்கொடி உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.