மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பவர்பிளேவில் பும்ராவுக்கு குறைந்தது இரண்டு ஓவர்கள் கொடுங்கள்; முன்னாள் கேப்டன் வலியுறுத்தல்!

பவர்பிளேவில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு குறைந்தது இரண்டு ஓவர்களாவது கொடுக்க வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

News image

ஜஸ்பிரித் பும்ரா - படம் | பிசிசிஐ

Updated On :3 மார்ச் 2026, 12:08 pm

பவர்பிளேவில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு குறைந்தது இரண்டு ஓவர்களாவது கொடுக்க வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கான போட்டிகள் நிறைவடைந்த நிலையில், நாளை (மார்ச் 4) முதல் அரையிறுதிப் போட்டிகள் தொடங்குகின்றன.

கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நாளை நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே திடலில் நாளை மறுநாள் (மார்ச் 5) நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில், பவர்பிளேவில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு குறைந்தது இரண்டு ஓவர்களாவது கொடுக்க வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பவர்பிளேவில் ஜஸ்பிரித் பும்ரா குறைந்தது இரண்டு ஓவர்கள் வீச வேண்டும் என்பதை நான் நம்புகிறேன். ஏனெனில், புதிய பந்தில் நன்றாக பந்துவீசி ஜஸ்பிரித் பும்ரா விக்கெட்டுகளை எடுத்தால் இந்திய அணிக்கு அது மிகவும் சிறப்பான விஷயமாக இருக்கும். டாப் ஆர்டரில் விளையாடும் ஜோஸ் பட்லர், பில் சால்ட் மற்றும் ஹாரி ப்ரூக்குக்கு பும்ரா அச்சுறுத்தலாக இருப்பார்.

ஜஸ்பிரித் பும்ரா ஐந்தாவது ஓவரில் பந்துவீச அழைக்கப்படுகிறார். ஏற்கனவே நான்கு ஓவர்களில் தொடக்க ஆட்டக்காரர்கள் குறைந்தது 8-10 பந்துகள் எதிர்கொண்டு எந்த ஒரு சிரமமுமின்றி விளையாடிக் கொண்டிருப்பார்கள். அதனால், ஆட்டத்தின் முதல் ஓவரை பும்ராவுக்கு கொடுத்து தொடக்க ஆட்டக்காரர்கள் விக்கெட்டுகளை வீழ்த்துவதுதானே சரியானதாக இருக்கும் என்றார்.

Summary

Former India captain Sunil Gavaskar has insisted that Jasprit Bumrah should be given at least two overs in the Powerplay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.