ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

பவர்பிளேவில் பும்ராவுக்கு குறைந்தது இரண்டு ஓவர்கள் கொடுங்கள்; முன்னாள் கேப்டன் வலியுறுத்தல்!

பவர்பிளேவில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு குறைந்தது இரண்டு ஓவர்களாவது கொடுக்க வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

News image
ஜஸ்பிரித் பும்ரா- படம் | பிசிசிஐ
Updated On :3 மார்ச் 2026, 12:08 pm

இணையதளச் செய்திப் பிரிவு

பவர்பிளேவில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு குறைந்தது இரண்டு ஓவர்களாவது கொடுக்க வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கான போட்டிகள் நிறைவடைந்த நிலையில், நாளை (மார்ச் 4) முதல் அரையிறுதிப் போட்டிகள் தொடங்குகின்றன.

கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நாளை நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே திடலில் நாளை மறுநாள் (மார்ச் 5) நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில், பவர்பிளேவில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு குறைந்தது இரண்டு ஓவர்களாவது கொடுக்க வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பவர்பிளேவில் ஜஸ்பிரித் பும்ரா குறைந்தது இரண்டு ஓவர்கள் வீச வேண்டும் என்பதை நான் நம்புகிறேன். ஏனெனில், புதிய பந்தில் நன்றாக பந்துவீசி ஜஸ்பிரித் பும்ரா விக்கெட்டுகளை எடுத்தால் இந்திய அணிக்கு அது மிகவும் சிறப்பான விஷயமாக இருக்கும். டாப் ஆர்டரில் விளையாடும் ஜோஸ் பட்லர், பில் சால்ட் மற்றும் ஹாரி ப்ரூக்குக்கு பும்ரா அச்சுறுத்தலாக இருப்பார்.

ஜஸ்பிரித் பும்ரா ஐந்தாவது ஓவரில் பந்துவீச அழைக்கப்படுகிறார். ஏற்கனவே நான்கு ஓவர்களில் தொடக்க ஆட்டக்காரர்கள் குறைந்தது 8-10 பந்துகள் எதிர்கொண்டு எந்த ஒரு சிரமமுமின்றி விளையாடிக் கொண்டிருப்பார்கள். அதனால், ஆட்டத்தின் முதல் ஓவரை பும்ராவுக்கு கொடுத்து தொடக்க ஆட்டக்காரர்கள் விக்கெட்டுகளை வீழ்த்துவதுதானே சரியானதாக இருக்கும் என்றார்.

summary

Former India captain Sunil Gavaskar has insisted that Jasprit Bumrah should be given at least two overs in the Powerplay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.