மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அரையிறுதிப் போட்டியில் ஃபார்முக்குத் திரும்புவாரா ஜோஸ் பட்லர்?

இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ஜோஸ் பட்லர் அரையிறுதிப் போட்டியில் ஃபார்முக்குத் திரும்புவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

News image
ஜோஸ் பட்லர்- படம் | AP
Updated On :3 மார்ச் 2026, 10:59 am

இணையதளச் செய்திப் பிரிவு

இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ஜோஸ் பட்லர் அரையிறுதிப் போட்டியில் ஃபார்முக்குத் திரும்புவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 8 சுற்று நிறைவடைந்து, நாளை முதல் அரையிறுதிப் போட்டிகள் தொடங்குகின்றன.

கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நாளை (மார்ச் 4) நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. நாளை மறுநாள் (மார்ச் 5) மும்பை வான்கடே திடலில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

ஃபார்முக்குத் திரும்புவாரா பட்லர்?

நடப்பு உலகக் கோப்பைத் தொடர் இங்கிலாந்து அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ஜோஸ் பட்லருக்கு சிறப்பானதாக அமையவில்லை. ஐசிசியின் கடந்த நான்கு தொடர்களில் (2023 ஒருநாள் உலகக் கோப்பை, 2024 டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, 2026 டி20 உலகக் கோப்பை) அவர் ஒரு முறை மட்டுமே 50 ரன்களைக் கடந்துள்ளார்.

அதிரடியாக விளையாடக் கூடிய ஜோஸ் பட்லர் நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இதுவரையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இலங்கையின் மெதுவான ஆடுகளங்கள் அவரது பேட்டிங் ஸ்டைலுக்கு ஏற்றவாறு இல்லை என்பது அவரது சராசரியான ஆட்டத்துக்கான காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது.

இலங்கை ஆடுகளங்களில் விளையாடிய போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த ஜோஸ் பட்லர், மும்பை வான்கடே திடலில் நன்றாக விளயாடி ஓரளவுக்கு ரன்கள் குவித்திருக்கிறார். மும்பை வான்கடே திடலில் நாளை மறுநாள் இந்திய அணியை அரையிறுதிப் போட்டியில் சந்திக்கவுள்ள நிலையில், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஜோஸ் பட்லர் நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார்.

நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இதுவரையிலான போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக சிறப்பாக விளையாடாவிட்டாலும், ஜோஸ் பட்லர் மீது இங்கிலாந்து அணி நிர்வாகம் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது. அரையிறுதிப் போட்டியில் ஜோஸ் பட்லரின் அனுபவம் அணிக்கு மிகவும் உதவியாக இருக்கும் என இங்கிலாந்து அணி நம்புகிறது. மீண்டும் ஃபார்முக்குத் திரும்பி இங்கிலாந்து அணியின் நம்பிக்கையை ஜோஸ் பட்லர் காப்பாற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.