கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளில் அமெரிக்காவின் வரலாற்றில் சொந்த நாட்டின் போட்டி அல்லாமல் அதிகமாகப் பார்க்கப்பட்ட போட்டியாக மெக்சிகோ - இங்கிலாந்து மோதிய ரவுண்ட் ஆஃப் 16 போட்டி மாறியிருக்கிறது.
ஒட்டுமொத்த உலகக் கோப்பைகளில் அமெரிக்கா அல்லாத ஆங்கில மொழி வர்ணனையில் அதிகமான பார்வையாளர்களைப் பெற்ற போட்டியாக மெக்சிகோ - இங்கிலாந்து ஆட்டம் வரலாறு படைத்துள்ளதாக அந்நாட்டின் ஃபோக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நடப்பு உலகக் கோப்பைப் போட்டிகளை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகின்றன. 48 அணிகளில் 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த மெக்சிகோ - இங்கிலாந்து போட்டிக்கு சராசரியாக வரும் 21.7 மில்லியனை தாண்டியிருந்ததாக அமெரிக்காவின் ஃபோக்ஸ் தொலைக்காட்சி அறிவித்திருக்கிறது.
இதற்கு முன்னதாக, 2022 உலகக் கோப்பை இறுதிப் போட்டியான ஆர்ஜென்டீனா - பிரான்ஸ் 16.7 மில்லியன் என்ற அளவில் முதலிடத்தில் இருந்தது.
ஞாயிறுக்கிழமை இரவு 10.15 முதல் 10.30 வரைக்கும் பார்வையாளர்கள் 25.7 மில்லியனைக் கடந்தார்கள் என ஃபோக்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கு அடுத்த நாளே அமெரிக்கா - பெல்ஜியம் மோதிய போட்டியில் 30 மில்லியனைத் தாண்டியது. அதுதான் இதுவரைக்கும் அதிக பார்க்கப்பட்ட போட்டியாக இருக்கிறது. ஆனால், அமெரிக்கா அல்லாத போட்டியில் மெக்சிகோ - இங்கிலாந்து போட்டி அதிகம் பார்க்கப்பட்ட வரிசையில் முதலிடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
WONDER WHOA! ð¦ð¦ð¦
— FOX Sports PR (@FOXSportsPR) July 8, 2026
Mexico vs. England delivered a Sunday night soccer spectacular on FOX - roaring into the record books as the NEW most-watched non-USMNT FIFA Menâs World Cup telecast in English-language U.S. history with 21,742,000 viewers. ðâ½ï¸ðº pic.twitter.com/UKQUrmyuEa
Summary
Mexico-England is most watched non-US English-language World Cup match in US history
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோல்கீப்பிங்கில் ஆதிக்கம்: 4 போட்டிகளில் ஒரு கோல்கூட விட்டுக்கொடுக்காத இரு அணிகள்!

40 ஆண்டுகள் கனவு நனவானது... ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறிய மெக்சிகோ!

பெனால்டி கொடுக்காதது ஏன்? இங்கிலாந்துக்கு ஆதரவாக செயல்பட்ட நடுவர்களை விமர்சிக்கும் ரசிகர்கள்!








