ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

உண்டு-உறைவிடப் பள்ளி மாணவர்களுக்கு உதவிகள் வழங்கும் விழா

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமையத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளுக்கென  உண்டு, உறைவிடப் பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

News image
Updated On :20 டிசம்பர் 2012, 6:38 am

கோ.ஜெயக்குமார்

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமையத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளுக்கென  உண்டு, உறைவிடப் பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராமசுப்பு தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பகவதி, கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் சுடலைமணி ஆகியோர் இப்பள்ளியில் படிக்கும் 35 மாணவ மாணவியருக்கு தலா ரூ.1000 மதிப்பிலான எழுது பொருட்கள், கணித கருவிப் பெட்டி உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் மற்றும் போர்வை, வாளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.

அப்போது அவர்கள் கூறியதாவது: இங்கு படிக்கும் அனைத்து மாணவர்களும் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முறையான பள்ளியில் சேர்த்து தொடர்ந்து படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். ஆசிரியப் பயிற்றுநர் முருகு திருநாவுக்கரசு நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.