தமிழ்பாடியில் திருவிளக்கு பூஜை

மழை வேண்டி திருச்சுழி அருகே தமிழ்பாடியில் பெண்கள் திருவிளக்கு பூஜை செய்தனர்.
Updated on
1 min read

மழை வேண்டி திருச்சுழி அருகே தமிழ்பாடியில் பெண்கள் திருவிளக்கு பூஜை செய்தனர்.

   திருச்சுழி மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளில் கடந்த சில வருடங்களாக போதிய மழை பெய்யவில்லை. இதனால் கண்மாய்கள், குளங்கள் வறண்டு காணப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து, குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விவசாயமும் நலிவடைந்து விட்டது.

   இதையடுத்து மழைவேண்டி திருச்சுழி அருகே தமிழ்பாடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ நந்த குமாரன் சுவாமி கோயிலில் நேற்று முன்தினம் இரவு பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்தினர். இதில் 250க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தமிழ்பாடி கிராம மக்கள், இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com