காரியாபட்டி அருகே மோட்டார் சைக்கிளை தீவைத்து எரித்ததாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
காரியாபட்டி அருகே உள்ள செவல்பட்டியைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் (26). இவர் அண்மையில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரும் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்த சமயத்தில் அவர்கள் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பிறகு அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு பாக்கியராஜ் தனது வீட்டு முன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். இரவு 10 மணி அளவில் செல்வம், பிரசாத், ரமேஷ்பாபு ஆகியோர் அவரது மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தார்களாம். பைக் தீப்பிடித்து எரிவதை பார்த்ததும் பாக்கியராஜ் வீட்டில் இருந்து வெளியே வந்து தட்டி கேட்டுள்ளார். அப்போது அவர்கள் பாக்கியராஜுக்கு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றார்களாம்.
இதுகுறித்து காரியாபட்டி போலீஸில் பாக்கியராஜ் புகார் செய்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து செல்வம், பிரசாத் ஆகியோரை கைது செய்தனர். ரமேஷ்பாபுவை தேடி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

