விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள வல்லப்பன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியர் நாகராஜன் தலைமை தாங்கினார். கிராம கல்விக் குழுத் தலைவர் தினகரன் முன்னிலை வகித்தார். கண்காட்சியில் மாணவ, மாணவியரின் அறிவியல் சாதனங்கள், செயல்விளக்கப் படைப்புகள் இடம் பெற்றன. வல்லப்பன்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி, வெற்றிலை முருகன்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி மாணவர்கள், கிராம பொதுமக்கள் அறிவியல் கண்காட்சியை பார்வையிட்டனர்.
அறிவியல் செயல் விளக்க படைப்புகள் பற்றிய கருத்துகளை அறிவியல் ஆசிரியர் வேலுமணி விளக்கினார். கண்காட்சியை பார்வையிட்ட அனைவருக்கும் பள்ளியின் அறிவியல் ஆசிரியர் ஆறுமுகச்சாமி இனிப்பு வழங்கினார். கண்காட்சி முடிவில் அறிவியல் செயல்விளக்க படைப்புகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு தலைமையாசிரியர் நாகராஜன் பரிசுகளை வழங்கினார்.
அறிவியல் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் வேளாங்கண்ணி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அர்த்தமில்லாமல் பேசும் உதயநிதி தமிழிசை சௌந்தரராஜன் | BJP | DMK

மறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை! இபிஎஸ் விளக்கம்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
மண்டாடி தமிழ்ப் புத்தாண்டு போஸ்டர்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

