விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அரசு மருத்துவமனை அருகே பயணிகள் நிழற்குடை அமைக்க வலியுறுத்தி, விருதுநகர் ஆட்சியர் ஹரிஹரனிடம், எஸ்.பி.எம்., டிரஸ்ட், சார்பாக மனு அளிக்கப்பட்டது.
காரியாபட்டி அரசு மருத்துவமனையில் குடும்ப நலம், பொது மருத்துவம், அறுவை சிகிச்சை வசதிகள் இருப்பதால், தினமும் 600 முதல் 800 பேர் வரை வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனர். கர்ப்பிணிகள், கைக்குழந்தைகளுடன் வரும் பெண்கள், முதியோர், சிகிச்சை பெற்றபின் பஸ்சுக்காக ரோட்டோரம் வெயிலிலும், மழையிலும் காத்திருக்கின்றனர். நோயாளிகள் ஒதுங்க இடமில்லாமல் தரையில் உட்கார வேண்டிய அவலநிலை உள்ளதால், பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர். மேலும், மருத்துவமனையில் இருந்து பஸ் ஸ்டாண்ட்டுக்கு ஒன்றரை கி.மீ., தூரம் நடந்து செல்லவேண்டும். இதனாலும் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். இவர்களது நலன் கருதி அரசு மருத்துவமனை அருகே பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என, எஸ்.பி.எம். டிரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி, விருதுநகர் ஆட்சியர் ஹரிஹரனிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அர்த்தமில்லாமல் பேசும் உதயநிதி தமிழிசை சௌந்தரராஜன் | BJP | DMK

மறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை! இபிஎஸ் விளக்கம்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
மண்டாடி தமிழ்ப் புத்தாண்டு போஸ்டர்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

