கலசலிங்கம் பல்கலைக்கழத்தில் படிக்கும் மாணவர்கள் உயர் படிப்பிற்கு வெளிநாடுகள் செல்வதற்கும், வேலை வாய்ப்பு பெற்று வெளிநாடு செல்வதற்கும் பயனுள்ள வகையில் ஜப்பனிஸ், பிரஞ்ச், கொரியன் உள்ளிட்ட மொழிகள் இங்கு கற்றுத் தரப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக பல்கலைக்கழகம், ருமேனியா நாட்டில் உள்ள அகோரா பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன்படி அப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியை செமிடா எலேனா டேவிட், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகம் வருகைபுரிந்து மாணவர்களுக்கு ருமேனிய மொழி கற்றுத் தருகிறார். இப் பயிற்சி 120 மாணவர்களுக்கு காலை மற்றும் மாலையில் அளிக்கப்படுகிறது.