ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

கோவிலாங்குளத்தில் தென்மண்டல வேளாண். ஆராய்ச்சிக் குழுக் கூட்டம்

விருதுநகர் மாவட்டம் கோவிலாங்குளத்தில் தென்மண்டல வேளாண் ஆராய்ச்சி, விரிவாக்க ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது.

Updated On :17 டிசம்பர் 2014, 6:51 pm

விருதுநகர் மாவட்டம் கோவிலாங்குளத்தில் தென்மண்டல வேளாண் ஆராய்ச்சி, விரிவாக்க ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த வேளாண்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில். விஞ்ஞானிகளுடன் விவசாயிகள் கலந்து கொண்டு இதர துறை சார்ந்த தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் பிரச்னைகள் குறித்து விவாதித்தனர்.

முன்னதாக, மண்டல ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் பால்பாண்டி வரவேற்றார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக ஆராய்ச்சி இயக்குநர் மகேஸ்வரன் தலைமை வகித்தார்.

இதில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்குநர் பொன்னுச்சாமி, பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறை இயக்குநர் அனந்தகுமார், பயிர் பாதுகாப்பு துறை இயக்குநர் ராமராஜூ, விருதுநகர் மாவட்ட இணை வேளாண்மை இயக்குனர் சுப்பையா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். மண்டல ஆராய்ச்சி நிலைய உழவியல் துறை பேராசிரியர் செந்திவேல் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.