தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

குடிநீர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் குடிநீர் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. யூனியன் ஆணையாளர் மகாலட்சுமி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் கதிரேசன், பேரூராட்சி செயல் அலுவலர்கள் காரியாபட்டி ஜெயச்சந்திரசேகரன், மல்லாங்கிணறு ஜவகர் முன்னிலை வகித்தனர்.

Updated On :5 மார்ச் 2014, 6:49 pm

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் குடிநீர் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. யூனியன் ஆணையாளர் மகாலட்சுமி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் கதிரேசன், பேரூராட்சி செயல் அலுவலர்கள் காரியாபட்டி ஜெயச்சந்திரசேகரன், மல்லாங்கிணறு ஜவகர் முன்னிலை வகித்தனர்.

 யூனியன் துணைத் தலைவர் ராமமூர்த்தி பேரணியை துவக்கி வைத்தார். காரியாபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர்.

 காரியாபட்டி யூனியன் அலுவலகத்தில் விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. குடிநீர் வடிகால் வாரியப் பொறியாளர்கள், அலுவலர்கள் குடிநீரின் பாதுகாப்பு குறித்து பேசினர். இதில் ஒன்றியக் கவுன்சிலர்கள், பேரூராட்சிக் கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.