காரியாபட்டி அருகேஅனுமதியின்றி மணல் அள்ளிய 7 லாரிகள் பறிமுதல்

காரியாபட்டி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 7 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Updated on
1 min read

காரியாபட்டி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 7 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

காரியாபட்டி அருகே ஆத்திகுளம் பேருந்து நிறுத்தம் பின்புறம் உள்ள குண்டாற்றில் அனுமதியின்றி 7 லாரிகளில் மணல் அள்ளி கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் சுபாநந்தினி லாரியை சோதனையிட்டார்.

அதில், அரசு அனுமதியின்றி மணல் அள்ளியது தெரியவந்தது. உடனடியாக, 7 லாரிகளையும் கோட்டாட்சியர் பறிமுதல் செய்து ,மேல்நடவடிக்கைக்காக அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com