விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இடி தாக்கியதில் தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம், வேல்முருகன் நாடார் தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் பாண்டியன் (45). தேங்காய் வெட்டும் கூலி வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு, கொத்தன்குளம், ரயில்வே கேட் அருகே உள்ள குருசாமிராஜா என்பவரின் தோட்டத்தில் வேலை செய்துவிட்டு, அங்கிருந்த தென்னை மரத்தின் கீழ் பாண்டியன் நின்று கொண்டிருந்தார். அப்போது, இடி தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வன்னியம்பட்டி போலீஸார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






