விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இடி தாக்கியதில் தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம், வேல்முருகன் நாடார் தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் பாண்டியன் (45). தேங்காய் வெட்டும் கூலி வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு, கொத்தன்குளம், ரயில்வே கேட் அருகே உள்ள குருசாமிராஜா என்பவரின் தோட்டத்தில் வேலை செய்துவிட்டு, அங்கிருந்த தென்னை மரத்தின் கீழ் பாண்டியன் நின்று கொண்டிருந்தார். அப்போது, இடி தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வன்னியம்பட்டி போலீஸார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்

விரைவில் மனம் திறந்து பேசுவேன்: அண்ணாமலை

பாகிஸ்தான்- 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

உத்யோக் பவன் அருகே தீ விபத்து: தொழிலாளா்களின் தற்காலிக குடியிருப்புகள் சேதம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


